பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனாவுக்கு எதிரான போரில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு என அறிவித்திருந்த பிரதமர் மோடி தற்போது மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து மேலும் 18 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த ஒரு வாரம் மிகவும் முக்கியமானது; தளர்வுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் நாளை வெளியிடப்படும். தற்போதைய சூழலில், ஊரடங்கு நீட்டிப்பும், கட்டுப்பாடுகளும் அவசியமாகிறது;
அனைத்து நிலைகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவது அவசியம். அத்தியாவசிய பொருட்களின் தேவைகளுக்காக ஏப்.20ம் தேதிக்கு பின்னர் சில தளர்வுகள் இருக்கும்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.