shadow

‘மெர்சல்’ படத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தின் சென்சார் சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

இந்த படம் குறித்து நீதிபதிகள் கூறியபோது, ‘மெர்சல் படத்தின் வசனங்களை மக்கள் கண்மூடித்தனமாக நம்புவார்கள் என்பதை ஏற்கமுடியாது என்றும், தவறான கருத்தை சுட்டிக்காட்டுவதும் கருத்து சுதந்திரம்தான் என்றும் கூறினர். மேலும் நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில் ஒரு திரைப்படத்தை குறி வைப்பது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பணமதிப்பிழப்பை விமர்சித்ததற்காக எதிர்க்கட்சித்தலைவர் மீது வழக்கு போடப்படாத நிலையில் அதே விமர்சனத்தை வைத்த திரைப்படத்திற்கு எதிராக மட்டும் ஏன் வழக்கு போடுகிறீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ‘மெர்சல்’ படத்திற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்

Leave a Reply