மெர்சல் டைட்டில் வழக்கு: தடை தொடரும் என அறிவிப்பு
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘மெர்சல்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையிடப்படுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.
வரும் 6ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்டிரைக் காரணமாக எந்த புதிய படமும் வெளியாகாது என்று ஒருபக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னொரு பக்கம் ‘மெர்சல்’ டைட்டில் குறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வெள்ளியன்று வெளியாகும் என்றும் அதுவரை அந்த படத்தின் தலைப்புக்கான தடை தொடரும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.