மெட்ரோ ரயில் முன் குதித்த 28 வயது பெண் படுகாயம்:

மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்யும் அதிர்ச்சி சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை டெல்லி யில் 28 வயது பெண் ஒருவர் திடீரென மெட்ரோ ரயில் முன் குதித்ததில் படுகாயம் அடைந்தார்.

டெல்லியில் உள்ள பிரதாப் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை ரயிலுக்காக 28 வயது பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது ரயில் வந்தபோது திடீரென அவர் ரயில்முன் பாய்ந்தார்.

இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும், ரயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் டெல்லி பிரதாப் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply