மு.க.ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சந்தித்தது ஏன்?
நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சீதாராம் யெச்சூரி சந்தித்து பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்ட நிலையில் தமிழக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும் அவரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து ஆர்எஸ்எஸ் மாநில அமைப்பாளர் பி.எம்.ரவிகுமார் கூறியதாவது:நாட்டுக்கும், சமூகத்துக்கும் கருணாநிதி ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து ஆர்எஸ்எஸ் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தை ஸ்டாலினிடம் வழங்கினோம்.
ஆர்எஸ்எஸ் பற்றிய புத்தகத்தையும், கடந்த மாதம் டெல்லி விஞ்ஞான் பவனில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தையும் அவரிடம் அளித்தோம்.
திமுக தலைவர் கருணாநிதியை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளனர். நெருக்கடியான பல சூழல்களில் கருணாநிதி எங்களுக்கு உதவியுள்ளார். அந்த நினைவுகளை ஸ்டாலினிடம் பகிர்ந்துகொண்டோம். கருணாநிதியின் மகன் என்பதை தாண்டி, தனது உழைப்பு, திறமையால் தலைவர் பதவிக்கு வந்துள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தோம்.
Leave a Reply
You must be logged in to post a comment.