shadow

மு.க.ஸ்டாலினின் எழுச்சிப்பயணம் திடீர் ஒத்திவைப்பு! காரணம் மழையா? 2ஜியா?

நவம்பர் 7 முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை திட்டமிட்டிருந்த எழுச்சிப் பயணத்தை வரும் ஜனவரிக்கு தள்ளிவைக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நவம்பர் 7ஆம் தேதி 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளிவரவுள்ளதாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு பாதகமாக வந்தால், அன்றைய தினமே எழுச்சி பயணம் ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்காது என்பதால் எழுச்சி பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.,

ஆனால் திமுக தரப்பினர் இதை மறுத்துள்ளனர். அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை கூறி வரும் நிலையில், மழை எச்சரிக்கையால்தான் எழுச்சிப் பயணத்தை ஜனவரியில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு மேற்கொள்ள ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்

கனமழையும் குஜராத் தேர்தலும் டிரெண்டிங்கில் இருக்கும் நேரத்தில் மேற்கொள்ளும் பயணம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 

Leave a Reply