மும்பை ரயில் நிலையத்தில் நடைபாதை விழுந்தது: 16 பேர் காயம்

மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருந்து வரும் நிலையில் இந்த ரயில் நிலையம் அருகே உள்ள பயணிகள் நடை மேம்பாலம் சில மணி நேரங்களுக்கு முன் இடிந்து விழுந்தது. இதில் 16 பேர் காயம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது

ஒரே நேரத்தில் இந்த நடைபாதையில் அதிக கூட்டமாக பயணிகள் கடக்க முயன்றதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பாரம் தாங்காமல் நடைமேடை சரிந்டதாகவும், இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புப்படையினர் போராடி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மீட்புப்பணிகள் முற்றிலும் முடிந்தபின்னரே இந்த விபத்தில் மொத்தம் எத்தனை பேர் காயம் அடைந்துள்ளனர் என்பது தெரிய்வரும். மேலும் இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply