shadow

மும்பையில் பிடிபட்ட தஷ்வந்த், போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட்டம்:

சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவனும், பெற்ற தாயை நகை, பணத்திற்காக இரக்கமே இல்லாமல் கொலை செய்தவனுமான தஷ்வந்த், மும்பையில் போலீசாரால் பிடிபட்ட நிலையில் நேற்றிரவு திடீரென போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை போரூரில் சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த தஷ்வந்த் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தான். பின்னர் பெற்றோரோடு தங்கி இருந்த தஷ்யந்த், போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் தந்தை வீட்டில் இலாத நேரத்தில் தாய் சரளாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தஷ்யந்த், அவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 25 சவரன் நகை மற்றும் ரொக்கத்தை எடுத்து கொண்டு தலைமறைவானான்.

இந்த நிலையில், தன்ஷ்வந்தை பிடிக்க அமைக்கப்பட தனிப்படை 5 நாட்களுக்கு பின்னர் மும்பையில் கைது செய்தனர். இதனையடுத்து மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் தஷ்வந்தை தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது வரும் சனிக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பாந்த்ரா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து டிரான்ஸ்சிட் வாரண்ட் பெற்று, தஷ்வந்த்தை சென்னைக்கு அழைத்து வர முயன்றபோது, விமான நிலையத்தில் தன்ஷ்வந்த் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டான். தற்போது மீண்டும் தஷ்வந்தை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply