shadow

முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கெளஹாத்தியில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்த முடிவு சரி என்பதை குறிக்கும் வகையில் இந்திய அணியின் நான்கு முக்கிய விக்கெட்டுக்கள் வெறும் 27 ரன்களில் இழந்தன. ரோஹித்சர்மா, தவான், கோஹ்லி, பாண்டியா ஆகிய நான்கு விக்கெட்டுக்கள் வீழ்ந்த நிலையில் இந்திய தத்தித்தத்தி இறுதியில் 118 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களில் எடுத்து ஆல்-அவுட் ஆனது

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக சுலபமான இலக்கை நோக்கி விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மற்றும் பின்ச் விக்கெட்டுக்கள் விழுந்தாலும் ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் ஹெட் ஆகியோர்களின் சிறப்பான ஆட்டத்தால் 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 3வது டி-20 போட்டி அக்டோபர் 13ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply