முன்ஜாமீன் கேட்பது ஏன்? ரஞ்சித்துக்கு நெட்டிசன்கள் கேள்வி?
சோழமன்னன் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய இயக்குனர் ரஞ்சித் மீது இரண்டு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் அளிக்குமாறு ரஞ்சித் தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து கருத்து கூறி வரும் நெட்டிசன்கள், ‘ராஜராஜ சோழன் குறித்து அவ்வளவு தைரியமான கருத்துக்களை கூறிய ரஞ்சித், வரலாற்று ஆதாரங்களை வைத்து கூறியதாக கூறும் ரஞ்சித் முன்ஜாமீன் கேட்பது ஏன்? என்றும், தன்னுடைய ஆதாரங்களை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கலாமே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரஞ்சித்தின் முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.