shadow

முதியோர் காப்பகத்தில் சேர்க்க முயன்ற மகனை சுட்டு கொலை செய்த தாய்

தன்னை முதியோர் காப்பகத்தில் சேர்க்க முயன்ற 72 வயது மகனை 92 வயது தாய் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 92 வயது அன்னா மே ப்லஸிங் என்பவர் வயது முதிர்வு காரணமாக அவரை பார்த்துக்கொள்வதில் சிரமம் இருப்பதாக அவரது மகன் அடிக்கடி அவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஒரு நாள் மனைவியின் தொல்லை தாங்காமல் அன்னா மே ப்லஸிங் மகன் அவரி முதியோர் காப்பகத்தில் சேர்த்து விட முடிவு செய்துள்ளார்.

இந்த தகவலை ப்லஸிங்கிடம் தெரிவித்தபோது அதற்கு கடுமையாக ஆத்திரமடைந்து உடனே துப்பாக்கிகயை எடுத்து மகனையும் மருமகளையும் சுட்டார். இதில் ம்ருமகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால் துப்பாகி குண்டுக்கு அன்னா மே ப்லஸிங் மகன் மரணம் அடைந்தார்.

92 வயதாகும் தாய், பெற்ற மகனையே துப்பாக்கியால் சுட்டுகொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply