முதல்வருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! என்ன காரணம்?

thirumavalavan1சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் விசிக தலைவர் திருமாவளவன் சற்றுமுன்னர் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆனால் இந்த சந்திப்பின்போது ’உள்ளாட்சி தேர்தலில் துணை தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்கவேண்டும் என்றும் முதல்வரிடம் வலியுறுத்தியதாகவும், மேலவளவு கொலை குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என வலியுறுத்தியதாகவும் முதல்வரை சந்தித்த பிறகு தொல்.திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சி கூட்டம் ஒன்றில் பேசுகையில் இந்து கோவில் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததாக ஒருசில அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருந்தன. இதனையடுத்து விசிக தலைவர் திருமாவளவன் மீது போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply