முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு: ராஜினாமா செய்வாரா?
குட்கா விவகாரம் தற்போது உச்சகட்டத்தில் எட்டியுள்ள நிலையில் சற்றுமுன் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார். குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு நேற்று ஆஜரான நிலையில் இன்று அவர் முதல்வரை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்க்கட்சிகள் ராஜினாமா செய்ய வலியுறுத்தி வரும் நிலையில் இன்றைய இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வாய்ப்பில்லை என்றே தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.