முதல்வரின் வாகனத்திற்கு பின்னால் வந்த வாகனத்தில் பணம் பறிமுதல்


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் ஆணையத்தை சேர்ந்த பறக்கும் படை அதிகாரிகள் இன்று முதல்வர் வாகனத்திற்கு பின்னால் வந்த வாகனம் ஒன்றில் இருந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

உதகையில் முதல்வரின் வாகனத்திற்கு பின்னால் வந்த வாகனத்தில் இருந்து ரூ.17.11 லட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்த பணத்தை அரசுக் கருவூலத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். முதல்வர் வாகனத்திற்கு பின்னால் வரும் வாகனத்திடம் இருந்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply