அதிர்ச்சி தகவல்

மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல்முறையாக ஒரு மாநில முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா என்று கூறப்பட்டது. ஆனால் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ கொரொனா பாதிப்பில் உயிரிழந்தார்.

ஆனால் மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Leave a Reply