அதிர்ச்சி தகவல்

திருமணம் செய்த மணமகன் ஒருவர் முதலிரவு அன்றே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் அருகே சமீபத்தில் ஒரு காதல் திருமணம் நடந்தது. இருவரும் ஒரு சில ஆண்டுகள் காதலித்து அதன்பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்

இந்த நிலையில் புதுமண தம்பதிகளுக்கு இருவீட்டார் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர் முதலிரவில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது

இதன் காரணமாக ஆத்திரமடைந்த மாப்பிள்ளை மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

காலையில் புதுமணத் தம்பதிகளை பார்க்க வந்த இரு வீட்டாரும் மணமகள் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டும், மணமகன் தூக்கில் தொங்கியதை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply