முண்ட்ரோ சதம்: இந்தியாவுக்கு 197 ரன்கள் இலக்கு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்க ஆட்டக்காரர் முண்ட்ரோ மிக அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 58 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டர்களுடன் 108 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு 197 ரன்கள் இலக்காக உள்ளது.
பந்துவீச்சை பொருத்தவரையில் முகம்மது சிராஜ் ஒரு விக்கெட்டையும் சாஹல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். சிராஜூக்கு இதுதான் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.