shadow

மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் திரைப்படம்: மணிரத்னம் திட்டம்

சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய மல்டி ஸ்டார் திரைப்படமான ‘செக்க சிவந்த வானம்’ நல்ல வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முறை மூன்று பெரிய நடிகர்கள் இணையவுள்ளனர்.

தளபதி விஜய், சீயான் விக்ரம் மற்றும் சிம்பு ஆகிய மூவரையும் ஒரே படத்தில் இணைக்கவுள்ளதாகவும், இந்த படம் ஒரு புராணத்தை தழுவி உருவாக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதாக கோலிவுட் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply