மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை ஸ்பெயின் நாட்டின் அழகி ஏஞ்சலா போன்ஸ் என்பவர் பெற்றுள்ளார்.
சமீபத்தில் தாய்லாந்து நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான அழகி போட்டியில், உலகின் பல நாடுகளை சேர்ந்த 94 அழகிகள் பங்கேற்கிறார்கள். இதில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை ஸ்பெயின் அழகி ஏஞ்சலா போன்ஸ் என்பவர், பதிவு செய்துள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் திருநங்கைகள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 2012 ஆம் ஆண்டில் விலக்கிக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தடை விலக்கப்பட்ட பின் அழகிப்போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற பெருமை ஏஞ்சலாவுக்கு கிடைத்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.