கனிமொழி எம்பி விளக்கம்

மின்கட்டண விவகாரத்தில் திமுக குழப்பவும் இல்லை, அரசியலும் செய்யவில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

மின்கட்டணம் எவ்வளவு வந்திருக்கிறது என்று ஒவ்வொரு குடும்பத்துக்குமே தெரியும் என்றும், மின் கட்டணத்தை வைத்து திமுக அரசியல் செய்யவில்லை என்றும் கனிமொழி எம்.பி. திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நெடுஞ்சாலை டெண்டருக்கு இப்போது என்ன அவசரம் வந்தது என எம்.பி.கேள்வி எழுப்பிய கனிமொழி எம்பி, யாருடைய ஆலோசனைகளையும் தமிழக அரசு செவிமடுப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மின்கட்டண உயர்வு தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply