மாமியாருக்கும் தந்தைக்கும் தொடர்பு: அதிர்ச்சியில் கொலை செய்த வாலிபர்!
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சமீபத்தில் திருமணம் ஆன நிலையில் திருமணமான சில வாரங்களிலேயே தனது தந்தைக்கும் தனது மாமியாருக்கும் கள்ள தொடர்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
மேற்கு வங்க மாநிலத்தில் 30 வயது இளைஞர் ஒருவருக்கும் 23 வயது பெண் ஒருவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னரும் அவரது மாமியார் தன்னுடைய மகளைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்
இந்த நிலையில் மாமியாருக்கும் வாலிபரின் தந்தைக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து இருவரும் கள்ளத் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனை ஒரு நாள் கையும் களவுமாக பார்த்த இளைஞருக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் கத்தியை எடுத்து மாமியாரை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.