மாணவர்கள் காப்பியடிக்க உதவி செய்த கல்லூரி நிர்வாகம்: அதிர்ச்சி தகவல்

ஒரு பக்கம் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் நடந்த மோசடிகள் குறித்த விசாரணை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் கல்லூரி நிர்வாகமே தங்களது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து இரண்டு கல்லூரிகள் தேர்வு நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அருகே அமைந்துள்ள மாதா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 41 பேர் கும்பலாக காப்பியடித்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் எழுதிய தேர்வு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த கல்லூரி 3 ஆண்டுகள் தேர்தல் நடத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது

அதேபோல் ஆதி பராசக்தி கல்லூரியும் இதே குற்றச்சாட்டுக்கு ஆளாகி வரும் ஆகஸ்ட் மாதம் வரை தேர்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

Leave a Reply