மழை பெய்தாலும் சென்னையின் தண்ணீர் பிரச்சனை தீராது: அதிர்ச்சி தகவல்

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கேரளாவில் பெய்யும் பருவமழையால் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். ஆனால் இந்த மழையால் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை தீர வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையே நீர்ப்பிடிப்பு பகுதிக்கு தண்ணீர் வர காரணமாக இருக்கும் என்றும், அந்த மழை வரும் வரை தண்ணீர்க்கஷ்டம் தீர வழியில்லை என்றும் கூறப்படுகிறது

இதனிடையே கேரளாவில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு ஓரளவு தண்ணீர் வந்து அந்த தண்ணீரை வீராணம் ஏரிக்கு கொண்டு அதன்பின் சென்னைக்கு கொண்டு வர வேண்டிய நிலைதான் உள்ளது என்றும், அதேபோல் கிருஷ்ணா நீர் சென்னைக்கு கிடைத்தாலும் ஓரளவு நிலைமையை சமாளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply