மன்னிப்பு கேட்டதால் தண்டனையில் இருந்து தப்பிய எச்.ராஜா
நீதிமன்றங்கள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கின் விசாரணையில் ஆஜராக இன்று சென்னை ஐகோர்ட்டுக்கு வந்திருந்த எச்.ராஜா, ‘நீதிபதிகள் முன்பு தான், உணர்ச்சி வேகத்தில் தவறுதலாக கருத்தை தெரிவித்ததாகவும், தனது கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் எச்.ராஜா கூறினார்.
எச்.ராஜாவின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அவறுக்கு எதிரான வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்து உத்தரவிட்டனர். மன்னிப்பு கோரியதால் எச்.ராஜா தண்டனையில் இருந்து தப்பினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.