மதுரையில் மட்டும் வாக்குப்பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீடிப்பு

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் தினமான ஏப்ரல் 18ஆம் தேதி மதுரையின் சித்திரை திருவிழா நடைபெறும் நாள் என்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளி வைக்க வாய்ப்பில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டது

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்றாலும் மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறிய தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தேர்தலின்போது வன்முறை நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 111 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சத்யபிரதா தெரிவித்துள்ளார்

Leave a Reply