கேரளாவில் பரபரப்பு
கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் இடிபாடுகளிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக கேரள போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர் வழங்க விமானப்படைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 15 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் சைலஜா தகவல் தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.