மணிமுத்தாறு: விடுமுறைக்கு பின் பணியில் சேர்ந்த போலீஸ்காரர் தற்கொலை

மணிமுத்தாறு கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது

தற்கொலை செய்து கொண்டவர் 9வது பட்டாலியனை சேர்ந்த அஜின் ராஜ் என்பவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் அஜின் ராஜ் சமீபத்தில் சொந்த காரணத்திற்காக 21 நாட்கள் விடுமுறை எடுத்ததாகவும், விடுமுறைக்கு பின் பணியில் சேர்ந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply