shadow

மக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா

“ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், தூத்துகுடி மக்களும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்றே நினைகப்பதாகவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, ‘ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென ஏற்கனவே பசுமைத்தீர்ப்பாயம்
கூறியுள்ளதாகவும், மக்களும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்றே நினைப்பதாகவும், ஆனால் வளர்ச்சியை தடுக்கும் விதமாக சில நக்சல்ஸ் தேவையற்ற பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் மாநிலக்கட்சிகள் கூட்டணி அமைப்பதால் பாஜகவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், 5 மாநில தேர்தலுக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் பாஜக குறித்து கூறியிருப்பது தேர்தல் தொடர்பான அவரது சொந்த கருத்து என்றும் கூறினார்.

ஹெச்.ராஜா, ஸ்டெர்லைட், ரஜினிகாந்த், பாஜக

Leave a Reply