மக்களவையின் முதல் உரையில் ஜோதிமணி எம்பி அசத்தல்

தமிழகத்தில் கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி இன்று தனது முதல் உரையை ஆற்றினார்.

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் மக்களவையில் தனது முதல் உரையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி எம்பி கோரிக்கை விடுத்தார்

முதல் உரையிலேயே விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் கோரிக்கை விடுத்ததற்காக விவசாயிகள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

Leave a Reply