பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களிடமும் விசாரணையா?
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தற்போது தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது மகளிர் ஆணையமும் களமிறங்கியுள்ளது
இந்த விவகாரம் குறித்து மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி கூறியபோது, ‘பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்.
மேலும் தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களிடமும் விசாரணை நடத்தப்படும், விசாரணை அறிக்கை தேசிய மகளிர் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.