பொள்ளாச்சி என்கவுண்டர்: நடிகை கஸ்தூரியின் வித்தியாசமான டுவீட்

சமூகத்தில் நிலவும் எந்த ஒரு சம்பவத்தையும் வித்தியாசமான கோணத்தில் கருத்து தெரிவித்து வருபவர் நடிகை கஸ்தூரி என்பது தெரிந்ததே

அந்த வகையில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டர் குறித்து தனது டுவிட்டரில் நடிகை கஸ்தூரி கூறியபோது: பாலியல் பலாத்கார குற்றவாளிகளை விசாரணை செய்து நீதியின் முன் நிறுத்தாமல் உடனடியாக என்கவுண்டர் செய்து நீதியை நிலை நிறுத்திய 4 குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசார் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். உன்னாவ் அல்லது பொள்ளாச்சி பகுதிகளுக்கு அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

கஸ்தூரியின் இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தெலுங்கானா போலீசார்கள் இருக்கும் நிலையில் நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பொள்ளாச்சி குற்றவாளிகள் சர்வ சாதாரணமாக வெளியில் உலாவி வருவதை கஸ்தூரி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக நெட்டிசன்கல் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

Leave a Reply