பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக 66 போலீசார் வழக்கு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் அவர்களை சமீபத்தில் சென்னை ஐகோர்ட் நியமனம் செய்தது. ஐகோர்ட்டின் இந்த நியமனத்திற்கு எதிராக 66 போலீசார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
வழக்கு தொடுத்த 66 போலீஸ் அதிகாரிகளில் எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. ஆகியோர்களும் அடங்குவர். 66 போலீசார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
இந்த நிலையில் பொன்.மாணிக்கவேல் தங்களது விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாகவும் இந்த மனுவில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.