பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து: பெண்கள் அதிருப்தியா?


பொன்னியின் செல்வன்’ என்ற சரித்திர திரைப்படத்தை இயக்க தயாராகி வரும் மணிரத்னம் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் விறுவிறுப்பாக உள்ளார். மேலும் இந்த படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, அருள்மொழிவர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி, பூங்குழலி கேரக்டரில் நயன்தாரா, சுந்தரசோழன் கேரக்டரில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் ஆகியோர்களை மணிரத்னம் தேர்வு செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அவர் கம்போஸ் செய்யும் டியூன்களுக்கு ஏற்ற வகையில் பாடல்களை கவியரசு வைரமுத்து எழுதவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த செய்தி வெளிவந்ததில் இருந்து ‘மீடூ’ குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்துவுடன் மீண்டும் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து பணியாற்றுவதா? என்று பலர் குறிப்பாக பெண்கள் தங்கள் அதிருப்திகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply