பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இதையெல்லாம் பயன்படுத்த கூடாது: தேர்வுத்துறை உத்தரவு

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின்போது ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்களை பயன்படுத்தக்கூடாது என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் தேர்வுத்துறை சில அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

இதன்படி செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு நடைபெறும் வளாகம் மற்றும் தேர்வு அறையினுள் எடுத்து செல்லக் கூடாது. அதேபோல் விடைத்தாளில் எந்த காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாணவர் இது தன்னுடைய விடைத்தாள் என தனித்து காட்டும் விதமாக எந்த செயலையும் செய்ய கூடாது என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply