பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்ட இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாத பரோல் வழங்கப்பட்டுள்ளது
தனது உடல்நிலை மற்றும் தனது தந்தை குயில்தாசன் அவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஒரு மாத பரோலில் வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் சிறைத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார்
இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு பரோல் வழங்க சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து பேரறிவாளன் வரும் திங்கள்கிழமை முதல் ஒரு மாத பரோலில் வெளியே வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.