பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
அரசியல்வாதிகள் கைதி செய்யப்படும் நிலை ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தமிழகத்தில் வழக்கமாக இருந்து வரும் நிலையில் அரசியல் கட்சி ஒன்றின் பேனர் விழுந்ததன் காரணமாக சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த நிலையில் அவருடைய மரணத்திற்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சுபஸ்ரீ மரணம் குறித்து முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது இ.பி.கோ.304(ஏ)- கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.