பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்ற முயற்சி: துரைமுருகன்
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை என்று சொல்லி தமிழகத்தை ஏமாற்ற நினைக்கிறார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். எனவே தமிழக அரசு, மேகதாது அணை விஷயத்தில் கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள கூடாது என கூறியுள்ளார்.
மேலும் முதமைச்சர் பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என்று அடிக்கடி கூறிக்கொள்கிறார். ஆனால் அவருக்கு விவசாயிகளை பற்றி கவலை இல்லை என்றும் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.