பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை: மருத்துவர்கள் போராட்டம் தொடர்கிறது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த நிலையில் போராட்டம் செய்த மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெற்றது

ஆனால் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் மருத்துவர்களின் போராட்டம் தொடர்கிறது. அரசாணைப்படி கூடுதல் ஊதியத்தை உயர்த்தி
வழங்குதல் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply