இரண்டு பேர் கைது!
துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த சிறப்பு விமானத்தில் இருவர் ஒரு கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர்.
இருவரும் தங்களுடைய பேக்கில் உள்ள கைப்பிடியில் பாதரச கோட்டிங் செய்து தங்கத்தை கடத்தியுள்ளனர். இதுகுறித்த ரகசிய தகவல் கிடைத்த சுங்கத்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. தற்போது விமான போக்குவரத்து இல்லாத நிலையில் சிறப்பு விமானத்தில் வருபவர்கள் கூட தங்கம் கடத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.