பெற்றோரிடம் புகார் அளித்த வார்டனை அடித்தே கொன்ற இஞ்சினியரிங் மாணவன்

திருச்சியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவர், தான் சரியாக கல்லூரிக்கு செல்லாமல் டிகிக்கி கொடுத்து இருந்ததை பெற்றோரிடம் புகார் அளித்ததாக வார்டனை மீது கோபப்பட்டு அவரை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருச்சியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவர் ஹாஸ்டலில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்த நிலையில் அவர் 4 நாட்களாக தொடர்ச்சியாக கல்லூரிக்கு செல்லாமல் ஹாஸ்டலிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அந்த ஹாஸ்டல் வார்டன் வெங்கட்ராமன் என்பவர் கண்டித்ததாகவும் இருப்பினும் அந்த மாணவன் கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகின்றது

இதனை அடுத்து ஒரு மாணவன் குறித்து வார்டன் அவரது பெற்றோருக்கு புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் வார்டனின் கழுத்து மற்றும் தலை பகுதியில் கடுமையான தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Leave a Reply