பெண் தாசில்தாரை உயிரோடு கொளுத்திய விவசாயியும் மரணம்
தெலுங்கானா மாகாணத்தில் பெண் தாசில்தார் விஜயாரெட்டி என்பவரை அதே பகுதியை சேர்ந்த விவசாயி சுரேஷ் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரது அலுவலகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
தாசில்தார் விஜயாரெட்டி அவர்களை காப்பாற்ற முயன்ற டிரைவரும் பரிதாபமாக பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெண் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த விவசாயி சுரேஷ் என்பவரும் இன்று மரணமடைந்தார். இந்த சம்பவத்தில் விவசாயி சுரேஷுக்கும் 60 சதவீத தீக்காயம் இருந்ததாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவரும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இதனையடுத்து இந்த சம்பவத்தால் மூன்று உயிர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.