பெண் எம்பிக்கள் சொன்னபடியே நடந்தது: பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் சுட்டுக்கொலை

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி சமீபத்தில் 4 கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய பெண் எம்பிக்கள் ’4 குற்றவாளிகளையும் உடனடியாக தூக்கில் தொங்கவிட வேண்டும் என்றும், பொதுமக்கள் மத்தியில் சுட்டுக்கொல்ல வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார்

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான திடுக்கிடும் செய்தி என்னவெனில் பிரியங்கா ரெட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர்களும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த வழக்கின் விசாரணை ஒன்றுக்காக சம்பவ இடத்திற்கு 4 பேரையும் போலீசார் அழைத்துச் சென்ற போது திடீரென நான்கு பேர்களும் தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும் இதனை அடுத்து நான்கு பேரையும் போலீசார் சுட்டுக் கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது

உண்மையாகவே தப்பிச் செல்லப்பட்டபோது கொலை செய்யப்பட்டார்களா? அல்லது என்கவுண்டர் எல்லாம் செய்யப்பட்டார்களா? என்ற ஆராய்ச்சி தேவையில்லை என்றும் கொடூரமாக ஒரு பெண்ணை கொலை செய்த 4 பேர்களுக்கும் இந்த தண்டனை சரியானதுதான் என்றும் சமூக வலைதள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply