புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த சண்டையில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது.
புல்வாமா தாக்குதலை அடுத்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டை மேலும் அதிகரிக்கப்பட்ட நிலையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் என்னும் கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் சி.ஆர்.பி. எப். வீரர்கள், உள்ளூர் போலீசார் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இருதரப்புக்கும் இடையே சுமார் 4மணி நேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கம்ரான் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.