புறப்பட்ட 6 நிமிடங்களில் விபத்துக்குள்ளான விமானம்: 157 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியா நாட்டில் இருந்து நைரோபி சென்ற விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 149 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் என மொத்தம் 157 பேர் உயிரிழப்பு என தகவல் வெளிவந்துள்ளது.

149 விமான பயணிகள், 8 ஊழியர்களோடு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட 6வது நிமிடங்களில் விபத்துக்குள்ளானதாக எத்தியோப்பியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதிக்கு மீட்புபடையினர் விரைந்துள்ளனர். இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது

Leave a Reply