shadow

புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்: ராகுல்காந்தி

ஆர்.எஸ்.எஸ். என்றாலே திமுக உள்பட திராவிட கட்சிகளுக்கு பகைமை கட்சியாக இருக்கும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பாராட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல்காந்தி தனது டுவிட்டரில் ஆர்.எஸ்.எஸ் குறித்து குறிப்பிடுகையில், ‘இந்தியாவில் ஒரே ஒரு தொண்டு நிறுவனம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற அனைத்து தொண்டு நிறுவனங்களும் மூடப்பட்டு விட்டன. அரசை எதிர்த்து பேசினால் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. புதிய இந்தியாவுக்கு நல்வரவு என பதிவு செய்துள்ளார்.

ராகுல்காந்தியின் இந்த டுவிட்டர் பதிவு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply