பிள்ளையார்ப்பட்டியை அடுத்து தேனியிலும் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வள்ளுவர் சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட நிலையில் அந்த சிலைக்கு பரிகாரபூஜை செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த சம்பவமாக தேனி மாவட்டம் பெரியகுளத்திலும் வள்ளுவர் சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்தியிருப்பதால் இந்த பிரச்சனை நீண்டுகொண்டே போகிறது

இந்த நிலையில் பெரியகுளத்தில் அவமரியாதை செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையை நீர் ஊற்றி பாஜகவினர் சுத்தப்படுத்தி அந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். போகிற போக்கை பார்த்தால் இந்த பிரச்சனை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும் போல் தெரிகிறது

Leave a Reply