shadow

பிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனுவை தள்ளுபடி: மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றுக்கு தடை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடைக்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று இருதரப்பு வாதங்களும் நடந்தது

இந்த நிலையில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளதை அடுத்து இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுளது

 

Leave a Reply