shadow

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

பிரபல தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ் திரைப்பட வசனகர்த்தாவுமான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் உள்பட 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கும் என்பதால் இவர் எழுதிய புத்தகங்களை லட்சக்கணக்கோர் விரும்பி படிப்பதுண்டு

சஞ்சாரம் நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நாதஸ்வர கலைஞர்களில் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வியலை வரலாற்றை மையமாகக் கொண்ட நாவல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாபா, ஆல்பம், பாப்கார்ன், சண்டக்கோழி, சண்டக்கோழி 2, உன்னாலே உன்னாலே ,பீமா, தாம் தூம், மோதி விளையாடு, அவன் இவன், சமர் உள்பட பல திரைப்படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply