பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஓகே சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்
நாடு முழுவதும் அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை முறையாக நடத்தவும், அதிக வாக்கு சதவீதம் பதிவாகவும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை தேர்தல் ஆணையம் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் பாரத பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர்.ரஹ்மான், லதா மங்கேஸ்கர் உள்ளிட்ட பிரபலங்களை டேக் செய்து, தேர்தல் மற்றும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு ஓகே சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் கண்டிப்பாக இதனை செய்வதாக பதிலளித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.