பிரதமரின் ஐநா பேச்சில் ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
ஐ.நா. பொது அவையில் பிரதமர் மோடி தற்போது உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி, ஐ.நா அவையில் தனது பேச்சை தொடங்கியபோது, ‘கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி பேச்சை தொடங்கினார்
மேலும் இந்தியாவின் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கும் என்றும் வளரும் நாடானா இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் உலகின் மிகப்பெரிய நிதி சேர்க்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாகவும், வெறும் 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 37 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை இந்தியா திறந்துள்ளதாகவும், இந்த திட்டம் உலகம் முழுவதும் ஏழைகள் மீது நம்பிக்கையை வளர்க்க்கும் என்றும் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.